Saturday, June 6, 2015

வெளிச்சம்: நம்ம ஊரு நாயகன்

நம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டில் ஒன்றான கபாடி விளையாட்டிற்கு பெயர் போன வடுவூர் கிராமத்தில் பிறந்து இன்று சர்வதேச அளவிலான பல கபாடி போட்டிகளில் கலந்து கொண்டு நம் நாட்டிற்கு பல பதக்கங்களை வென்று தந்திருக்கும் நம்ம ஊரு நாயகன் ராஜகுரு சுப்ரமணியன் அவர்களை பாராட்டுவதில் பெருமிதம் கொள்வோம் .





- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா வடுவூர் புதுக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர்.
- சிறு வயதில் இருந்தே கபாடி மீது இருந்த ஆர்வத்தால் இடைவிடாத முயற்சிக்கு பின் இன்று இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
-கடந்த வருடம் (2014) உலக கோப்பை மற்றும் ஆசியன் போட்டிகளில் கலந்து கொண்டு இந்திய தங்க பதக்கம் வெல்ல உறுதுணையாக இருந்திருக்கிறார்.
- கடந்த வருடம் (2014) ஆரம்பித்த "PRO Kabbadi League" போட்டிகளில் "TELUGU TITANS " அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தியவர்.
- IPL  போன்ற அந்த தொடரில் இரண்டாம் அதிக பட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர்.
- கபாடி விளையாட்டை 2020 ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் சேர வழி வகுக்குமாறு தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
- முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்ற வாசகத்தின் அடையாளமாகவும் சாத்க்கத் துடிக்கும் பல இளைஞர்களின் கனவு நாயகனாகவும் விளங்கும் இந்த சாதனை தமிழன் இன்னும் பல வெற்றிகள் பெற நாம் வாழ்த்துவோம்.


No comments:

Post a Comment