Thursday, June 18, 2015

என்னம்மா இப்படி பண்றிங்களம்மா - 19/06/2015

1)   கணவன்: டார்லிங்! இன்னைக்கு அந்த கருப்பு நாய்க்கு சோறு வச்சியா?
      மனைவி:ஆமாங்க!!! உங்களுக்கு எப்படி தெரியும் ?
      கணவன்: வர்ற வழியில  செத்து கடந்துச்சு அதான்   கேட்டேன்.
      மனைவி: .....

2)    நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவும் தப்பில்லை...என்ன,  அந்த நாலு   
       பேரும் நம்ம வீட்டு ஆளா இருக்கக்கூடாது.

3)   கார்பரேட் நிறுவனங்கள் வருகையால் நாம் தொலைத்த  நம்ம ஊர்  நல்ல 
      விஷயங்களில் ஒன்று  ஆயில் மில் &  மாவு மில். ரீபைண்ட் ஆயில
      கொடுத்து கொன்னுகிட்டு இருக்காங்க.

4)    எந்த நடிகர்/நடிகையாச்சும் நான்தான் அழகுன்னு ஆணவத்தோட
       அலைஞ்சா நேரா அவுங்கள பாலா படத்துல நடிக்க விட்டுடுங்க மீதிய
       அவர் பார்த்துப்பார்.

5)    ஆபிசில விசமத்தனம் பன்றவன அரசியல் பன்றான்னு சொல்றோம்.
      ஆனா    நல்ல அரசியல்வாதி கிடைக்க மாட்டேங்குறான்னு
      அழறோம்..கொஞ்சம் முரண்பாடா தெரியுதுல்ல....

6)    சினிமாவுல யதார்த்தமாக நடிக்கிறவனும்...வாழ்க்கையில
       சினிமாத்தனமாக இருப்பவனும் தான் ஜெயிக்கிறான்.
        


No comments:

Post a Comment