Thursday, June 25, 2015

நல்லதே நினை... நல்லதே பேசு.. நல்லதே நடக்கும்..26/6/2015

1)  நம்ம கைல இருக்கிற  குடை மாதிரி தான் நம்ம மனசையும் வச்சுக்கணும். மழை வந்தாலும் வெயில் அடிச்சாலும் குடை தன் நிலை மாறுவதில்லை.

2) நாளைக்கு பண்ணவா? அப்படினு கேட்குற கேள்வியிலேயே தெரிஞ்சுக்கலாம் அவங்களுக்கு அந்த வேலையில இருக்கிற ஆர்வம்.

3) களவும் கற்று மற -
     களவு - திருட்டு , கல் - பொய்
     களவும் கற்றும்(கல்லும் என்பதன் மறுஊ சொல் ) மற.

4) எல்லாருக்கும் நல்லவனா இருக்க முயற்சி செய்யாதிங்க...ஏன்னா நம்மள சுத்தி  இருக்கிற எல்லாரும் நல்லவங்க கிடையாது.

5) மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கானது. புகைப் பிடித்தல் புற்று
    நோயை உண்டாக்கும்  .
    வடிவேல் வசனம்...அப்புறம் தம்பி நான் சிரிப்பா சொன்னதை எல்லாம் சீரியஸா எடுத்துக்காதிங்க...ஹைய்யோ ...ஹைய்யோ...

6) சந்தர்ப்பங்களை தேடி அலைய வேண்டாம். கிடைச்ச சந்தர்ப்பத்தை நழுவ விடாம ஜெயிக்கிறது தான் புத்திசாலித்தனம்.

7) எல்லா ஊர்லயும் 100 நாள் வேலை ஒழுங்கா நடந்திருந்தா எல்லா கிராமமும் நீங்க நினைக்கிற கனவு கிராமமா மாறியிருக்கும்.


   

No comments:

Post a Comment