Monday, June 22, 2015

என்னம்மா இப்படி பண்றிங்களம்மா - 23/06/2015


1)  எல்லாத்துக்கும் DUPLICATE போடுவான் சீனாக்காரன் ஆனா அவனோட நுடுல்ஸ்கே DUPLICATE போட்டான் பாரு ஒருத்தன்.

2) நம்ம ஊருல உசுர காப்பாத்துற ஆம்புலன்ஸ் கூட சாலை விதிகளை மதிப்பாங்க. ஆனா இந்த ஆட்டோ காரங்கள கேட்க ஆளே இல்ல.

3)  வண்டி ஓட்ட மொத நல்ல ரோடு இல்ல ...அப்படியும் ரோடு நல்லா இருந்தா அங்க ஓட்ட இடம் இல்ல...அதையும் மீறி ஒட்டிக்கிட்டு போன RTO செக்கிங். ஒரு நாட்டுல இருந்துகிட்டு எல்லா ஸ்டேட் க்கும் வரி கட்டணும்ன எப்புடி. #ONE INDIA ONE BORDER.

4) இந்த நாட்டுல கொலை பண்ணவன் கொள்ளை அடிச்சவன் எல்லாம் சந்தோசமா வண்டி ஓட்டுறானுக. ஆனால் NON - KA  registration வச்சிருக்கவன் பெங்களூர் ல வண்டி ஓட்டுறது உயிரை கைல புடிச்சிகிட்டு தான் ஓட்ட வேண்டியிருக்கு.

5) சாப்பாட்டை பொறுத்த வரை சுவையும் ஆரோக்கியமும் புருஷன் பொண்டாட்டி மாதிரி,  ரெண்டும் ஒத்தே போகாது. ரெண்டும்  ஒத்துப் போறது சாப்பாடுன்னா வீடு. இன்னொன்னு உங்களுக்கு தெரியாதது இல்ல....

6) முதலில் ஓலை, அப்புறம் புறா, பிறகு கடிதம், தந்தி, டெலிபோன்,செல்போன்,ஈமெயில்,SMS,Whatsup இப்படி தகவல் தொடர்பு துறை பெரும் வளர்ச்சி அடைந்திருந்தாலும், ஒரு சேதிய நேர்ல சொல்றப்ப வர்ற அந்த தவிப்பு,ஏக்கம்,மகிழ்ச்சி,சோகம்,பூரிப்பு,ஆவல் இதெல்லாம் அதுல எல்லாம் வர்றதில்ல.

7) தேவை இல்லாதை எல்லாம் மக்க வைத்து விட்டு விதையை மட்டும் விருட்சமுற செய்யும் பூமி ஒரு தாய்தான்.






1 comment: