Sunday, June 21, 2015

என்னம்மா இப்படி பண்றிங்களம்மா - 22/06/2015


1)  மனைவி: என்னங்க DINNER க்கு Maggie ஓகே வா?
     கணவன்: Maggie சாப்பிடக் கூடாதாம். நியூஸ் பார்க்கலையா?
     மனைவி: அப்போ உப்புமா ஓகே வா?
     கணவன்: போற உயிர் Maggie லயே போகட்டும் விடு.

2)  நீ எப்படி கேட்காம வாழப் பழகிட்டியோ அதே போல தான் அவங்களும் கொடுக்காம  வாழப் பழகிட்டாங்க.

3) 1000 ரூபாய் கொள்ளையடிச்சவன சும்மா விட்டுட்டு 100 ரூபாய் கொள்ளையடிச்ச ஆள உள்ள துக்கிபோடுறது என்னய்யா நியாயம்னு சொல்ற அளவுக்கு பேசுறது தான் இப்போ நம்மோட சுதந்திரம்.

4) இனி பள்ளிக்கூடத்துல நீதிக்கதைகள், நேர்மை, நியாயம், ஒழுக்கம் இவைகளைப் பற்றி சொல்லி கொடுக்காதிங்கப்பா. தேவைப்படாததை படிச்சு அவன் என்னய்யா பண்ணப் போறான்.

5)  போற போக்க பார்த்தா விஷால அடுத்த CM ஆக்கி விட்டுருவாங்க போல...

6)  கிரிக்கெட், ஜூடோ, கால்பந்து, டென்னிஸ், இசை  இந்த வரிசையில் குழந்தைகளுக்கு கொஞ்சம் விவசாயமும் சொல்லி கொடுங்க..

7) என்னன்னாம்மோ எல்லாம் ஆன்லைன்ல வந்திடுச்சு...இனி விவசாயி தயாரிச்ச பொருளை நேரடியா கஸ்டமர்ஸ் கிட்ட சேர்க்குற நேரம் வந்துடுச்சு...எத்தனை காலம் தான் தரகர்கள் கிட்ட ஏமாறுறது.


 

No comments:

Post a Comment