Thursday, July 31, 2014

முழு பூசணிக்காயை சோத்துல மறைச்ச கதை தெரியுமா?

ஒரு ஊர்ல ஒரு திருடன் இருந்தான். ஒவ்வொரு திருடனும்  ஏதாவது ஒரு பொருள் திருடுறதுல கில்லாடியா இருப்பாங்க. நம்ம ஆள் பூசணிக்காய் திருடுறதுல பலே கில்லாடி. அதனால அவன எல்லாம் பூசணிக்காய் திருடன், பூசணிக்காய் திருடன் அப்படினு கூப்பிடுவாங்க. அப்படியே அவன் வாழ்க்கை முடிஞ்சு போச்சு. அவனுக்கு அப்புறம் வந்த அவனது தலைமுறைகள் திருட்டு  தொழில்ல ஈடுபடாம நல்ல முறையில் சம்பாதித்து பணக்காரர்களாக வாழ்ந்து வந்தார்கள். இருந்தாலும் ஊரில் எல்லோரும் அவர்களை பூசணிக்காய் திருட்டு குடும்பம் என்றே அழைத்து வந்தது. இது அவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கியது. இதனால் மனமுடைந்த அவர்கள் ஒரு சந்நியாசியை அணுகி விவரத்தை எடுத்து சொல்லி, இதிலிருந்து எப்படி நாங்கள் மீள்வது என்று வினவினர். அதற்கு அவர் ஒரு நாள் ஊரில் உள்ள எல்லோரையும் கூட்டி அவர்களுக்கு அன்னதானம் வழங்குங்கள் சரியாகிடும் என்று சொன்னார். அவர்களும் அந்த சந்நியாசி சொன்னது போல் ஊரில் உள்ள எல்லாருக்கும் அன்னதானம் செய்தார்கள்.
அன்று முதல் ஊரில் உள்ள அனைவரும் அந்த குடும்பத்தினரை பூசணிக்காய் திருடன் குடும்பம் சொல்றதுக்கு பதிலாக அன்னதானம் போட்ட குடும்பம் அப்படினு சொல்லி அழைத்தார்களாம்.
இதுதான் முழு பூசணிக்கையை சோத்த போட்டு மறைச்ச கதை.

Sunday, March 23, 2014

ஓட்டுக்கு பணம் வாங்குவோம்.

இப்பல்லாம் எல்லாரும் எதுக்கு தேர்தல்ல  நிற்கிறாங்க ...

1) நல்லா  சொத்து சேர்க்க
2) சொத்து இருக்கிறவங்க பதவி ஆசைக்கு
3) அப்பா ஓய்வு பெற்றவுடன் மகன்
4) கண்டிப்பா மக்களுக்கு நல்லது செய்றதுக்கு இல்ல

சரி இவங்க எல்லாம் தேர்தல் நேரத்துல யாரும் இவங்க நல்ல பெயர வச்சோ அல்லது அவர்களுடைய பின்புலத்தை வச்சோ அல்லது மக்களின் முன்னேற்றத்திற்கான வழிகளை சொல்லியோ ஓட்டு கேட்க வருவதில்லை.

பணம், பணம் மற்றும் பணம். இது தான் அவர்களது மூலதனம். சொல்லப் போனால் இதுவும் ஒரு இன்வெஸ்ட்மென்ட் தான். சின்ன கல்லு பெத்த லாபம்.

இவங்க தேர்தல் நேரத்துல செலவழிக்கிற பணம் நல்ல வழியில் இருக்கா ? அதுவும் இல்ல.
குடிமகன் களுக்கு நல்லா வாங்கி கொடுத்து அவங்க வீட்ல நிம்மதி குலைப்பாங்க.

கண்டிப்பா இனி ஜெயிக்கிற யாரும் மக்களுக்கு செய்யணும்கிற ஆர்வமே இருக்காது.

அதனால ஊராட்சி மன்ற தலைவர்  பதவிக்கு யாரும் நின்னா ஒரு நல்ல தொகையா (20/25 லட்சம் ) வாங்கி ஊர்ல உள்ள 10 தன்னார்வ இளைஞர்கள்/பெரியோர்கள்  முன்னிலையில் வங்கியில் போட்டு வைத்து கொண்டு  ஊருக்கு தேவையான நல்ல காரியங்களை செய்து கொள்ளலாம்.

அப்படி அவர் ஜெயிக்காத பட்சத்தில் அந்த தொகையை அவருக்கே கொடுத்து விடலாம்.

இப்படி செய்றதுனால சில குடிமகன்கள்  இதற்கு  எதிர்ப்பு தெரிவிப்பார்கள். பரவாயில்லை அவங்க ஓட்டு இல்லாட்டி அவங்க வீட்டுக்காரம்மா மற்றும் குடும்ப ஓட்டு கண்டிப்பா கிடைக்கும்.

இதை நம்ம ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் இருந்து ஆரம்பிக்கலாம்.

ஓட்டுக்கு பணம் வாங்குறது தப்பு தான். ஆனால்  அது  நல்லதுக்கு செலவு ஆகும் போது எதுவுமே தப்பில்லை.