Monday, July 6, 2015

என்னம்மா இப்படி பண்றிங்களம்மா - 07/07/2015

1) பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் உலகத்துலேயே பெரிய துரோகம்.

2) "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும்" - ஈ.வீ. கே.எஸ் .இளங்கோவன் - தலைவரே சொல்றதுதான் சொல்றீங்க முதல் அமைச்சர்னு தான் சொல்லுங்களே..

3) பீட்சா பர்கர் கடை இருக்கிறது யாருக்கு  நல்லதோ இல்லையோ ஜிம் வச்சிருக்கவங்களுக்கு நல்லது - ஏன்னா எல்லாருடைய புது வருட கனவுகளில் ஒன்று உடல் எடை குறைப்பது.

4)  "டாஸ்மாக் வருமானத்தில் சரிவு. நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு" - அடப் பாவிகளா அவனே  திருந்துனாலும் நீங்க விடமாட்டிங்க போலேயே.

5) உலகத்துலேயே அதிக நோய் எதிப்பு சக்தியுடன் வாழ்வது நம்ம ஊர் மக்கள் தான் - பின்ன வெள்ளைக்காரன கொண்டாந்து ஒரு வாரம் நம்ம ஊர் ட்ராபிக்ல, மார்க்கெட்ல விட்டுப் பாருங்க நாலு நாள் தங்க மாட்டான்.

6) நம்ம ஊர்ல தான் சினிமாகாரங்களுக்கு ஓய்வே கிடையாது. நடிகைன்னா சீரியல் இருக்கு, நடிகன்னா அரசியல் இருக்கு.

7) கூத்தாடிய தூக்கி வச்சு கொண்டாடுறதும், விவசாயிய தற்கொலை பண்ணிக்க வைக்கிறதும் அரசு மட்டுமல்ல, நாமளும் தான் - 1000 ரூபா கொடுத்து படம் பார்ப்போம் 1 ரூபா பால் விலை ஏறுனா பால் வியாபாரிய திட்டுவோம். ஆனா தியேட்டர்ல ஒரு காபிய 80 ரூபா கொடுத்து வாங்குறத கௌரவமா நினைப்போம். பால் கறக்கிறவன் கேவலமானவன் ஆனா டிகாஷன் கலந்து கொடுக்கிறவன் நகாரிகமானவன்.



Sunday, July 5, 2015

என்னம்மா இப்படி பண்றிங்களம்மா - 06/07/2015


1) உன் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்றேன்னு சொல்லி உன்கிட்ட இருந்து 10 ரூபாய் வாங்கி ஒரு தேவைகளையும் நிறைவேற்றாமல் உனக்கு ஒரு 10 காசுக்கு ஒரு குச்சி மிட்டாய் இலவசமாக வாங்கி தருவது தான் இன்றைய ஜனநாயகம்.

2) நான் நடுநிலையானவன்னு சொல்றவங்க எல்லாம் மறைமுகமாக மெஜாரிட்டி கட்சிய தான் ஆதரிக்கிறாங்க.

3) படிக்கிறதுக்கு ஊர்ல இருந்த நிலைத்த வித்து, படிச்சு முடிச்சு வேலை பார்த்த காசை வச்சு ஊருக்கு போயி நிலம் வாங்கி விவசாயம் பண்ணலாமானு யோசிக்கிறது தான் இன்றைய நடுத்தர வயதினரின் மன ஓட்டம்.

4) தொழில்நுட்பத்தில் எவ்வளவோ மாற்றம் வந்திருந்தாலும் பெரும்பாலானோர் வீட்டில் இன்னும் அரிசி சோறுதான்.

5)  "மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு " - விஜயகாந்த்.
    எவ்வளவு நேரம் தான் லேபிளையே படிப்பீங்க சீக்கிரம் ஓபன் பண்ணுங்க கேப்டன்.

6) நீ எரும மாடு மேய்க்க தான் லாயக்குனு திட்றவங்களுக்கும் டீ போட பால் கறந்து கொடுக்கிறான் பாரு அவன் தான் கடவுள்.