Monday, July 6, 2015

என்னம்மா இப்படி பண்றிங்களம்மா - 07/07/2015

1) பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் உலகத்துலேயே பெரிய துரோகம்.

2) "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும்" - ஈ.வீ. கே.எஸ் .இளங்கோவன் - தலைவரே சொல்றதுதான் சொல்றீங்க முதல் அமைச்சர்னு தான் சொல்லுங்களே..

3) பீட்சா பர்கர் கடை இருக்கிறது யாருக்கு  நல்லதோ இல்லையோ ஜிம் வச்சிருக்கவங்களுக்கு நல்லது - ஏன்னா எல்லாருடைய புது வருட கனவுகளில் ஒன்று உடல் எடை குறைப்பது.

4)  "டாஸ்மாக் வருமானத்தில் சரிவு. நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு" - அடப் பாவிகளா அவனே  திருந்துனாலும் நீங்க விடமாட்டிங்க போலேயே.

5) உலகத்துலேயே அதிக நோய் எதிப்பு சக்தியுடன் வாழ்வது நம்ம ஊர் மக்கள் தான் - பின்ன வெள்ளைக்காரன கொண்டாந்து ஒரு வாரம் நம்ம ஊர் ட்ராபிக்ல, மார்க்கெட்ல விட்டுப் பாருங்க நாலு நாள் தங்க மாட்டான்.

6) நம்ம ஊர்ல தான் சினிமாகாரங்களுக்கு ஓய்வே கிடையாது. நடிகைன்னா சீரியல் இருக்கு, நடிகன்னா அரசியல் இருக்கு.

7) கூத்தாடிய தூக்கி வச்சு கொண்டாடுறதும், விவசாயிய தற்கொலை பண்ணிக்க வைக்கிறதும் அரசு மட்டுமல்ல, நாமளும் தான் - 1000 ரூபா கொடுத்து படம் பார்ப்போம் 1 ரூபா பால் விலை ஏறுனா பால் வியாபாரிய திட்டுவோம். ஆனா தியேட்டர்ல ஒரு காபிய 80 ரூபா கொடுத்து வாங்குறத கௌரவமா நினைப்போம். பால் கறக்கிறவன் கேவலமானவன் ஆனா டிகாஷன் கலந்து கொடுக்கிறவன் நகாரிகமானவன்.



No comments:

Post a Comment