Wednesday, June 17, 2015

சினிமாவும் நானும் - மனதைக் கவர்ந்த வசனங்கள்


சம்சாரம் அது மின்சாரம்:
=======================
 லக்ஷ்மி: ஆம்பளையா பிறந்த ஒருத்தன்  ரெண்டு விசயத்துக்கு கணக்கு பார்க்கக் கூடாது. ஒன்னு, பெத்தவங்களுக்கு போடுற சோறு இன்னொன்னு கூடப் பொறந்தவளுக்கு  சீரு.

தேவர் மகன்:
============
கமல்:   மெதுவான்னா  எம்புட்டு மெதுவாய்யா அதுக்குள்ளே நான் செத்துருவேன்   போலிருக்கே...

சிவாஜி: போ...செத்துப்போ...நான் தடுக்க முடியுமா..எல்லா பயபுள்ளையும் ஒரு நாளைக்கு சாக வேண்டியது தான்.வாழ்றது முக்கயந்தான் இல்லன்னு சொல்லல..ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கைய வாழ்ந்துட்டு போறதுதான் அந்த சாவுக்கு பெருமை. வெத வெதச்ச உடனே பழம் சாப்பிடனும்னு நினைக்க முடியுமோ..இன்னைக்கி நான் விதிக்கிறேன் நாளைக்கு நீ பழம் சாப்பிடுவா ...அப்புறம் உன் மவன் சாப்பிடுவான்...அதுக்கு அப்புறம் அவன் மவன் சாப்பிடுவான்.அதெல்லாம் இருந்து பார்க்கிறதுக்கு நான் இருக்க மாட்டேன்.ஆனா வெத நான் போட்டது . இதெல்லாம் எனக்கு பெருமையா ...கடமை ஒவ்வொருத்தருடைய கடமை.


தேவர் மகன்:
============
நாசர் : ஊருல மொதல்ல சத்தமா பேசுறவன் பேச்சுதான் நியாயமா போகுது , அதுல நெசம் செத்துப்போகுது.

எந்திரன்:
=========
கேள்வி:கடவுள் இருக்கறா ?
ரோபோ ரஜினி: கடவுள்னா யாரு?
கேள்வி கேட்டவர் :நம்மை படச்சவரு .
ரோபோ ரஜினி:  என்னை படைச்சது டாக்டர் வசீகரன். கடவுள் இருக்காரு.

ரமணா:
=======
 ரவிச்சந்திரன் : ஒரு மனுஷன் செத்தா அவன் தாய் அழுதா அவன் ஒரு நல்ல மகன் . அவன் மனைவி அழுதா அவன் ஒரு நல்ல கணவன் . அவன் புள்ளைங்க அழுதா அவன் ஒரு நல்ல தகப்பன் . அவனுக்காக இந்த ஊரே அழுதா அவன் ஒரு நல்ல தலைவன் . உனக்காக இந்த ஊரே அழுகுதப்பா ....என் பேத்தி சாப்பிட்டு 2 நாள் ஆச்சு.
 
ரமணா:
=======
போலீஸ்: அவன் யாருன்னே உனக்கு தெரியாது. அவனுக்காக உன் மகன  அடி வாங்க சொல்லுற. அவன இதுக்கு முன்னாடி பார்த்து இருக்கியா ...அவன முன்ன பின்ன தெரியுமா?
 அந்த மகனின் தாய்: நீ கடவுள பார்த்து இருக்கியா ....

புதிய வார்ப்புகள்:
================
பாக்யராஜ்: என்னடா தம்பி (மாணவன் பேரு மறந்துட்டேன் )  எப்புவுமே லேட்டா வருவா இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட.
மாணவன் : எப்புதும் எங்க அம்மா எனக்கு வேல சொல்லும் அத செஞ்சுட்டு வர லேட்  ஆகிடும். நேத்து எங்க அம்மா செத்து போச்சு.

அன்பே சிவம்:
=============
கமல்: யாருன்னே தெரியாத ஒருத்தருக்கு ரத்தம் கொடுத்து காப்பாத்தனும்னு துடிக்கிற அந்த மனசு இருக்கே அது தான் சார் கடவுள்.

மகாநதி :
========
கமல்: ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் ஒரு கெட்டவனுக்கு கெடச்சுருதே...அது எப்புடி?

சூர்யவம்சம்:
============
சரத்குமார்: உளி படும்போது வலின்னு அழுத எந்த கல்லும் சிலையாகாது ...ஏர் உழுவும் போது கஷ்டம்னு நெனைக்கிற எந்த நிலமும் வெளஞ்சு நிக்காது...அது மாதிரி அப்பா அம்மா   கோபப்படுறதையும் திட்டுறதையும் தப்புன்னு நெனைக்கிற எந்த புள்ளையும் முன்னுக்கு வரமுடியாது.

சதுரங்க வேட்டை:
==================
நடராஜ்:ஒருத்தன ஏமாத்தனும்னா அவன்கிட்ட கருணையை எதிர்பார்க்க கூடாது. அவனோட ஆசைய  தூண்டனும்.









1 comment: